Tuesday, July 31, 2012
Sunday, July 29, 2012
ஓடிப்போவது ஏன்? எதற்காக?
அப்பப்பா......விடிந்துவிட்டால் போதும்! ' எங்கோ, யாரோ யாருடனோ
ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்....
இப்படி ஓடி,ஓடியென ஓட்டத்திற்க்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது
தற்கால சூழ்நிலை :( கண்ட,கேட்ட,கேள்விப்பட்டவைகளில் பல 'சரியான
காரணங்கள்', பல 'காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை'கள்.!
சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்....
முன்பெல்லாம் கன்னிபெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள்.. ஆனால் தற்போது திருமணமானவர்கள், குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!! இதற்கு காரணங்கள்தான் என்ன?
சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?
என்ன காரணமாயிருக்கும்..?? இவ்வுலக இச்சையா? இனக்கவர்ச்சியின் தாகமா?
இல்லை இல்லறத்தில் இனிமையில்லையா? இல்லை இல்லத்தில் மனக்கசப்பா? இல்லை
கணவன் மனைவிக்குள் இவ்விதத்திலும் ஒத்துபோகவில்லையா? அல்லது அன்பின்
பறிமாற்றங்கள் அணுவளவுமில்லையா? இதில் எது இல்லை? எதில் குறை? இல்லை
எதில் பிழை???? கன்னியாய் ஒருபெண் படிதாண்டிசென்றாலே காலங்காலத்திற்க்கு
ஒரு சொல்லாகிவிடும். அதேசமயம் சென்றவள் ஒன்று இனகவர்ச்சிக்காக
சென்றிருக்கவேண்டும். அல்லது மனக்காதலுக்காக சென்றிருக்கவேண்டும்.
எதுவென்றபோதும் படிதாண்டுவது பாதகசெயல் அவளுக்குமட்டுமல்ல
அவள்குடும்பதிற்க்கும் அவள் வாரிசுகளுக்கும் சேர்த்துதான். ஆனால்
அதனினும் அநியாயச்செயல் கல்யாணம் முடிந்தும் குழந்தை பிறந்தும் ஒரு பெண்
படிதாண்டுவது. சிந்திக்கத்தவறி,சிந்தனைகள் குழம்பி, சீரழிவிற்குபோகும்
பெண்மக்களாய் மாறுவது ஏன்? அல்லது அவர்களை மாற்றுவது எது? என வினாக்களோடு
புறப்பட்ட மனதுக்குள் விடைகளென்னும் வெளிச்சம் சிறு மின்னல் கீற்றாக
தென்பட்டது.அவைகளிங்கே
Subscribe to:
Posts (Atom)


